கோவை மாநகரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.


கோவை: கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதில் சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.



குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக மாநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கும் சில விநாடிகள் மட்டும் மிகச்சிறிய அளவிலான ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...