உடுமலையில் புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி பங்கேற்பு!

உடுமலையில் நடந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பள்ளிகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்,



ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசையான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மது ஒழிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். ஆகையால் மதுவை ஒழிக்க அறப்போராட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது என்றார்.



இந்த, குடிமங்கலம் பூளவாடி, உட்பட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அவர் வழங்கினார்.



பொதுக்கூட்டத்தில் நிறைவில், மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.



மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி-க்கு பாடம் சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.பொதுசெயலாளர் முருகானந்தம், முன்னாள் எம் எல்.ஏ., தனியரசு, விஸ் கர்மாஜகத்குரு பாபுஜி சுவாமிகள் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்மணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...