உடுமலையில் புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி பங்கேற்பு!

உடுமலையில் நடந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பள்ளிகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்,



ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசையான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மது ஒழிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். ஆகையால் மதுவை ஒழிக்க அறப்போராட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது என்றார்.



இந்த, குடிமங்கலம் பூளவாடி, உட்பட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அவர் வழங்கினார்.



பொதுக்கூட்டத்தில் நிறைவில், மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.



மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி-க்கு பாடம் சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.பொதுசெயலாளர் முருகானந்தம், முன்னாள் எம் எல்.ஏ., தனியரசு, விஸ் கர்மாஜகத்குரு பாபுஜி சுவாமிகள் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்மணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...