உடுமலையில் புதிய தமிழகம் கட்சி பொதுக்கூட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி பங்கேற்பு!

உடுமலையில் நடந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அவருக்கு பள்ளிகளில் பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.



புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் பிறந்தநாளையொட்டி, அக்கட்சியின் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்று டாக்டர்.கிருஷ்ணசாமி பேசுகையில்,



ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசையான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் மது ஒழிக்க வேண்டும் என பலமுறை ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. மதுவால் எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். ஆகையால் மதுவை ஒழிக்க அறப்போராட்டம் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவாகி வருகின்றது என்றார்.



இந்த, குடிமங்கலம் பூளவாடி, உட்பட அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளை அவர் வழங்கினார்.



பொதுக்கூட்டத்தில் நிறைவில், மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.



மேலும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி-க்கு பாடம் சொல்லிக் கொடுத்த மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.பொதுசெயலாளர் முருகானந்தம், முன்னாள் எம் எல்.ஏ., தனியரசு, விஸ் கர்மாஜகத்குரு பாபுஜி சுவாமிகள் மற்றும் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தமிழ்மணி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...