குடிநீர் வழங்ககோரி கோவை மலுமிச்சம்பட்டியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்!

மலுமிச்சம்பட்டி ஊராட்சி அவ்வை நகர் பகுதியில் 22 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதைக் கண்டித்து செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் உள்ள 1 மற்றும் 2 ஆவது வார்டுக்கு உட்பட்ட அவ்வைநகர் பகுதியில் சுமார் 900 வீடுகள் உள்ளன.

இங்கு வழக்கமாக 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை மற்ற தேவைக்கான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கடந்த 22 நாட்களாக அவ்வைநகர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதை கண்டித்து அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் 25 பேர் காலிக்குடங்களுடன் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து அங்கு வந்த செட்டிபாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அங்கு வந்த கவுன்சிலர்கள் சித்ரா மற்றும் கனகராஜ் குடிநீர் பிரச்சனை குறித்து விளக்கினர், குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததாகவும் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.

இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் செட்டிபாளையம் - போத்தனூர் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...