மேட்டுப்பாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆசை வார்த்தை கூறி 13வயது சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்ற கேரளாவைச் சேர்ந்த பீரவின் என்பவரை, சிறுமியின் உறவினர்கள் பிடித்து தாக்கினர். இதையறிந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 13வயது சிறுமியை கடத்திய கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள புகை பரிசோதனை நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்தார். அப்போது பிரவீனுக்கு அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளரின் மகளான 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறியது.நேற்று மாணவியை பிரவீன், சென்னைக்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, மதினா நகர் அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியை மீட்டனர்.

பின்னர் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீனை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...