மேட்டுப்பாளையம் அருகே 13 வயது சிறுமியை கடத்திய வாலிபர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆசை வார்த்தை கூறி 13வயது சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்ற கேரளாவைச் சேர்ந்த பீரவின் என்பவரை, சிறுமியின் உறவினர்கள் பிடித்து தாக்கினர். இதையறிந்த போலீசார் வாலிபரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் 13வயது சிறுமியை கடத்திய கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தியை சேர்ந்தவர் பிரவீன் (28). இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள புகை பரிசோதனை நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக வேலை பார்த்து வந்தார். அப்போது பிரவீனுக்கு அருகே ஜூஸ் கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளரின் மகளான 13 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறியது.நேற்று மாணவியை பிரவீன், சென்னைக்கு செல்லலாம் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். இதையறிந்த மாணவியின் உறவினர்கள் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று, மதினா நகர் அருகே ஆட்டோவை நிறுத்தி மாணவியை மீட்டனர்.

பின்னர் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரவீனை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...