கோவை மாவட்ட கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை - வாட்ஸ்-அப் குழுக்கள் துவங்க அறிவுறுத்தல்!

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக, கல்லூரிகளில் anti drug awareness எனும் whatsapp குழுக்களை தொடங்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட கல்லூரிகளில் anti drug awareness வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் “மாணவர்களிடையே போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கிளப்” என்ற திட்டம் காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், இந்த கிளப்பை தொடங்க போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இத்திட்டத்தின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கிளப்பை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் துவங்கி வைத்தார்.



இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அனைத்து கல்லூரி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதில் கோவை சரக காவல்துறை தலைவர் விஜயகுமார் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களிடையே போதை பழக்கத்தை தடுக்க கல்லூரி நிர்வாகத்தில் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தனர்.

அதேபோல் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்களையும் விற்பனை செய்பவர்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், ஒவ்வொரு கல்லூரிகளிலும் “anti drug awareness “ என்ற whatsapp குழுக்களை தொடங்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் மாதம் ஒருமுறை காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், அறிவுரைகள் நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதே போல் போலீசாரின் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில், கல்லூரி நிர்வாகங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்ய உள்ளதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...