அவிநாசியில் சரக்குவேன் மீது மோதிய வேன் - போக்குவரத்து காவலர்கள் உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் மையத் தடுப்பை உடைத்துக்கொண்டு மினி சரக்கு வேன் மீது மோதிய விபத்தில் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: அவிநாசியை அருகே மங்கரசுவளையபாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் அவிநாசி திருப்பூர் சாலையில் உள்ள வண்ண கூறை தகடு உற்பத்தி செய்யும் கம்பெனியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நேற்று, ஆட்டையம்பாளையம் அருகில் வேனை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தபோது, சிவசக்தி ஃபைனான்ஸில் பணிபுரியும் மேனேஜர் வீரமணி, பைனான்ஸ் ஊழியர்கள் கிருஷ்ணன் மற்றும் முருகேஷ் ஆகிய மூவரும் குமரேசனிடம் பணத்தை கட்டச் சொல்லி பேசி உள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், முருகேஷ் என்பவர் அத்துமீறி வேனை எடுத்துக்கொண்டு வேகமாக கோவை ரோட்டில் அவிநாசி நோக்கி வந்துள்ளார்.



அப்போது அதிவேகமாக வந்த அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து, வேகத்தடை மீது ஏறி மேட்டுப்பாளையம் சாலையில் இருந்த மைய தடுப்பை உடைத்ததோடு, அவிநாசி நோக்கி வந்த மினி சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி சரக்கு வேன் சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த அவிநாசி போக்குவரத்து போலீசாரின் ஜீப்பின் பின் பகுதியில் லேசாக உரசி கவிழ்ந்து.



இந்த விபத்தில், மினி சரக்கு வேன் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. வேன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை கண்ட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் வேகமாக அங்கிருந்த ஓடியதால் உயிர்தப்பினர்.

விபத்து குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...