கோவையில் அரங்கேறிய தொடர் கொள்ளை சம்பவங்கள் - தூத்துக்குடியில் சிக்கிய குற்றவாளிகள்!

கோவை மாவட்டம் எட்டிமடையில் அடுத்தடுத்து 8 கடைகள் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜன் (32), பாலகிருஸ்ணன் (35), பாரதிசெல்வம் (வயது22) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா (37) என 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கடந்த மார்ச் 20 ஆம் தேதி கோவை எட்டிமடை பிரிவில் உள்ள மளிகை கடை, போட்டோ ஸ்டுடியோ, சலூன் கடை உள்ளிட்ட 8 கடைகளில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சுமார் ரு.45 ஆயிரம் பணம் மற்றும் சிசிடிவி ஹார்டிஸ்க்குகளை திருடிச் சென்றனர்.

அன்றைய தினமே பிச்சனூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது60) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 12 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து வீடு மற்றும் 8 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு நடந்த திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், மார்ச் 21 ஆம் தேதி பூலுவப்பட்டி பகுதியில் உள்ள பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான உரக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், அவரது கடையில் இருந்து அருகே உள்ள தங்க நகைக்கடைக்கு துளையிட்டு உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆலாந்துறை போலீஸார் ரோந்து சென்றதால் போலீஸாரை கண்ட மர்ம நபர்கள் சுத்தியம், கடப்பாறையை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் வள்ளநாடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

அடுத்தடுத்த திருட்டுச்சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதில், தூக்குக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு குழு, இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, தூத்துக்குடிக்கு விரைந்த தனிப்படை போலீஸார், அங்கு பதுங்கியிருந்த ரங்கராஜன் (வயது32), பாலகிருஸ்ணன் (வயது35), பாரதிசெல்வம் (வயது22), கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜா (வயது37) ஆகிய நான்கு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களை கோவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்த பலராமன் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்த 5 பேரும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாடிக்கையாக சென்று பூட்டுகளை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பலராமன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரையும் போலீஸார் அழைத்துவந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...