கோவையில் மதுபோதையில் தகராறு - கல்லூரி மாணவர் குத்திக்கொலை

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த தகராறில், கத்தியால் குத்தப்பட்டு 21 வயது இளைஞர் புவனேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது23). ஆட்டோ ஓட்டுநரான இவரது குடும்பத்தை பற்றி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தகுமார் (வயது22) என்பவர் அபாசமாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாலாஜிக்கும், நந்தகுமாரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள கோவில் அருகே பாலாஜி மற்றும் அவரது நண்பர்களும், நந்தகுமார் நண்பர்கள் குழுவினரும், மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீண்டும் பழைய பிரச்சனையை வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜியின் நண்பரான 17 சிறுவர் ஒருவர், கல்லூரி மாணவரான புவனேஷ்குமார் (வயது21), மற்றும் சந்தோஸ் , சஞ்சய் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், நிலை தடுமாறி விழுந்த புவனேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த சந்தோஷை கோவை அரசு மருத்துவமனைக்கும், சஞ்சய் என்ற இளைஞரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், புவனேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...