அலகுமலை ஜல்லிக்கட்டு விவகாரம் - கிராமசபை கூட்டத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு!

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போலீசார் கலைக்க முயன்ற நிலையில் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை ஊராட்சியில் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டம் ரத்தான நிலையில், இன்று வேலாயுதம்பாளையம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் அலகுமலை ஊராட்சிக்குட்பட்ட சேமலை கவுண்டம்பாளையம், சுப்பையகவுண்டம்பாளையம், அலகுமலை, வேலாயுதம்பாளையம், கோவில்பாளையம், செட்டிப்பாளையம், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் கூட்டம் ரத்தானது.



இந்த நிலையில், இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதாகவும் எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என கூறி ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழரின் பாரம்பரிய விளையாட்டை சட்டஒழுங்கு பிரச்சினை இல்லாமல் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலேயே ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்ற போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



ஜல்லிக்கட்டு வேண்டாம் என ஒரு தரப்பினரும் வேண்டும் என ஒரு தரப்பினரும் கோஷங்கள் எழுப்பியதால் கிராம சபை கூட்டம் எந்தவித முடிவுகளும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

இதனிடையே, வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் கடந்த வாரம் அறிவித்த நிலையில் அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மீண்டும் கிராம மக்கள் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...