திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் கட்டாய முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.



மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்களும் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...