கோவையில் மக்கள் நலத்திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்கள் ரூ.87.5 லட்சம் நிதியுதவி

கோவையில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில்‌ ரூ.12.50 லட்சம், சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் மற்றும் கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.‌87.5 லட்சம் மதிப்பிலான நிதியுதவி மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் இன்று வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.87.5 லட்சம் நிதியுதவி மாநகராட்சி ஆணையரிடம் இன்று வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ ஆர்‌.எஸ்‌.புரம்‌ ஆண்கள்‌ மேல்நிலை பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்‌ கீழ்‌ புதிதாக கழிவறைகள்‌ கட்டுவதற்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ்‌ ரூ. 12.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை நிர்வாக இயக்குனர்‌ கிருஷ்ணன்‌‌ கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம்‌ இன்று வழங்கினார். இந்த நிகழ்வின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கார்த்திக்‌ செல்வராஜ்‌ உடனிருந்தார்.



இதேபோல், கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ உள்ள எரியூட்டு மையத்தில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ புதிதாக தகன மேடை மற்றும்‌ சடங்கு முன் மண்டபம்‌ கட்டும்‌ பணிகளுக்காக சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்பிடம் சி.ஆர்‌.ஐ. பம்ப்ஸ்‌ நிர்வாக துணைத்‌ தலைவர்‌ செளந்தரராஜன்‌ இன்று‌ வழங்கினார்‌. இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.



மேலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ வ.உ.சி. மைதானத்தில்‌ உள்ள சருக்கு விளையாட்டு அரங்கத்தில்‌ புனரமைப்பு பணிகள்‌ மேற்கொள்வதற்காக கோவை சருக்கு விளையாட்டு கழகம் சார்பில் ரூ.25 லட்சம்‌ வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை கோவை சருக்கு விளையாட்டு கழக செயலாளர்‌ சந்திரசேகர் மற்றும் பொருளாளர்‌ சாந்த நரசிம்மன்‌ ஆகியோர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌பிடம் இன்று வழங்கினர். இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷர்மிளா உடனிருந்தார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...