கோவையில் ஆம்புலன்சில் பிரசவம் - டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

கோவை சுல்தான்பேட்டையில் பிரசவத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆகி அழகான குழந்தை பிறந்தது. துரிதமாக செயல்பட்டு தாய், சேய் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.


கோவை: கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது கணவர் சிவராஜ் உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் சூலூர் ராவுத்தர் பிரிவு அருகே சென்றபோது, பிரியாவுக்கு பிரசவ வலி அதிகரித்து குழந்தையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, அவசரகால ஓட்டுநர் தண்டாயுதபாணி உதவியுடன் ஆம்புலன்சில் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றினார்.

பின்னர் தாயும், குழந்தையும் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை மற்றும் தாயின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...