சினிமா தியேட்டருக்கு நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுப்பு - இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தை பார்க்க நரிக்குறவர்கள் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்களில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்காக உரிய டிக்கெட்டுடன் வந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தியேட்டர் ஊழியர்கள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு, அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிது நேரம் கழித்து படம் பார்க்க நரிக்குறவர்கள் இன மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தீண்டாமை அடிப்படையில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியானது.

அதை டேக் செய்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், கலை அனைவருக்கும் பொதுவானது. நரிக்குறவர் இன சகோதரி மற்றும் சகோதரர்கள் முதலில் படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது ஏற்றுகொள்ளமுடியாதது என தியேட்டர் நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.



இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், பத்து தல படமானதுU/A சர்பிகேட் படம். எனவே, சட்டப்படி 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பார்க்க அனுமதிக்கூடாது. தியேட்டருக்கு உரிய டிக்கெட்டுடன் வந்த நபர்கள், 2,6,8 மற்றும் 10 வயதில் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

எனவேதான் தியேட்டர் பணியாளர்கள் குழந்தைகளுடன் படம் பார்க்க முடியாது எனக்கூறி அனுமதி மறுத்தனர். பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், பார்வையாளர்களுடம் கூடிய வேறுவேறு கோணங்களில் திசை திருப்பப்பட்டது.

எனவே, சட்டம் ஒழுங்கை கருத்தில்கொண்டும், இந்த பிரச்சனையை முடிவுக்குகொண்டுவரும் வகையிலும், குழந்தைகளுடனே அவர்கள் படம் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. அவர்கள் படம் பார்த்ததற்கான ஆதாரமாக வீடியோ ஒன்றையும் ரோணிகி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...