கோவை அரசு மகளிர் கல்லூரியில் 11 புதிய பாடப் பிரிவுகள் துவக்க திட்டம் - கல்லூரி முதல்வர் தகவல்!

கோவை புலியகுளத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அடுத்தாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகளை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் புதிய கட்டிடங்கள் தயாரானதும் பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.


கோவை: புலியகுளத்தில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அடுத்தாண்டு முதல் புதிதாக 11 பாடத்திட்டங்கள் துவங்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவை புலியகுளத்தில் அரசு மகளிர் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 650க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த கல்லூரியில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர் வீரமணி கூறியதாவது,

தற்போது இந்த கல்லூரியில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 முதுநிலை படிப்புகளும், 6 இளநிலை படிப்புகளும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.காம், எம்.எஸ்.சி. கனிணி அறிவியல், எம்.எஸ்.சி. கணிதம் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளும், பி.எஸ்.சி. அரசியல் அறிவியல், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த கல்லூரி தற்போது 9 அறைகள் கொண்ட பழைய மாநகராட்சி பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

இப்போது பி.ஜி. திட்டங்களை தொடங்க எங்களிடம் போதுமான இடம் இல்லை. எனவே புதிய கட்டிடம் தயாரானதும் அங்கு புதிய படிப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும் அடுத்த ஆண்டுக்குள் கல்லூரிக்கு ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும். அதற்கு அரசு ரூ.13 கோடி ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...