கோவை சிட்கோ அருகே ரயில் மோதி முதியவர் பலி

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விசாரணையில் இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையத்தை சண்முகம் (82) என்பது தெரியவந்துள்ளது.


கோவை: சிட்கோ அருகே ரயில்மோதி தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் உயிரிழந்தார்.

கோவை - பொள்ளாச்சி சாலை சிட்கோ அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது கேரளாவில் இருந்து கோவை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.



இதையடுத்து ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலெட் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போத்தனூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சண்முகம் (82) என்பதும், இவர் புதன்கிழமை காலை ஈச்சனாரி கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றதும், அப்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய நிலையில், சிட்கோ அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது.

போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...