ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ம் தேதி தொடக்கம்! - நீலகிரி ஆட்சியர் அம்ரித் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் நடப்பாண்டிற்கான கோடை விழா வரும் மே மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி மே.19-ந்தேதி தொடங்கவுள்ளதாக ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


உதகையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் தலைமையில் கோடை விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



அதில், மே 6-ந் தேதி முதல் கோடை விழா தொடங்கவும், முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சியை மே.6 மற்றும் 7-ந்தேதி என 2 நாட்கள் நடத்த முடிவு செய்யபட்டது.

அதனை தொடர்ந்து, மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் கூடலூரில் 10-வது வாசனை திரவிய கண்காட்சி நடத்தவும், அதேபோல், மே 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் உதகை ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.



குறிப்பாக மே 19, 20, 21, 22, 23 ஆகிய 5 தேதிகளில் பிரத்திபெற்ற 125-வது மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நடைப்பெறுகிறது.

மே 27, 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சியை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவ சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...