தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு - கோவை மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகள் உரிமத்தை முறையாகப் புதுப்பிக்காவிட்டால், பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முறையாக செயல்படாத தனியார் பள்ளிகளுக்கு எதிராக மாவட்ட கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளின்படி தங்களது உரிமத்தை புதுப்பித்துக்கொள்வதற்கான ஆவணங்களை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை முறையாகப் புதுப்பிக்காமல் ஒரு சில தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டுவருவதாக சுட்டிக்காட்டியுள்ள மாவட்டக் கல்வித் துறை, அவற்றில் சில அரசுக்கு சொந்தமான நிலத்தில் இயங்கிவருவதாகவும், அரசு நிலத்தை முறைகேடாக பயன்படுத்தியிருப்பதோடு, இது தொடர்பாக விசாரணை நடத்தச் செல்லும் அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரசு நில ஆக்கிமிப்புகளை அகற்றும் பணி, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளே ஸ்கூல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் தனித்தனியாக அந்தச் சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ப்ளே ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு 5.5 சென்ட் நிலம் மற்றும் 16.5 சென்ட் நிலம் 15 ஆண்டுகளுக்கு அந்தந்தப் பள்ளியின் பெயரில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். மாண்டிசோரி பயிற்சி உள்ளிட்ட பொருத்தமான கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, கோவையில் கடந்த 3 நாட்களாக ஜமாபந்தி நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 240 பள்ளிகள் பங்கேற்றன. இதைத் தொடர்ந்து, வரும் வாரங்களில் ப்ளே ஸ்கூல் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...