தாராபுரம் அருகே ரூ.190 கோடியில் 25 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் - அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

தாராபுரம் அடுத்த வடுகப்பட்டியில் ரூ.190 கோடி மதிப்பில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் 110 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கிலோ வாட் தனியார் துணைமின் நிலையம், 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே ரூ.190 கோடி மதிப்பில் 25 மெகாவாட் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடுகப்பட்டியில் 190 கோடி மதிப்பில் கோவையைச் சேர்ந்த மின் சக்தி நிறுவனமான நற்றிணை வென்ச்சர்ஸ் சார்பில் 110 ஏக்கரில் 110/33 கிலோ வாட் தனியார் துறை துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.



இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல மின்சார வாரிய முதன்மை பொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கன் உட்பட ஏராளமான தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...