பன்றிக் காய்ச்சலுக்கு கோவையில் மேலும் இரண்டு பெண்கள் பலி

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட மர்மக்காய்ச்சல்கள் வெகுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால், அன்றாடம் சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டம், கே.ஜி.சாவடி பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் (57) மற்றும் அதேப் பகுதியைச் சேர்ந்த வசந்தா மேரி ஆகிய இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதற்காக அவர்கள் அப்பகுதியிலேயே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களுக்கு இரத்த பரிசோதனையில் ஈடுபட்ட அம்மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதிசெய்தனர்.

இதைத்தொடர்ந்து, பழனியம்மாளும், வசந்தாதேவியும் சிகிச்சைக்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவை அரசு பொது மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை பழனியம்மாளும், இரவு வசந்தாமேரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பால் 35 பேரும், டெங்கு காய்ச்சலால் 7 பேரும் மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...