தாராபுரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்கும் அதிகாரி - ஆடியோ வெளியாகி பரபரப்பு!

அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கித் தருமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்கச் சொல்லி தொழிலாளர்களை அதிகாரி வற்புறுத்திய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம், சுமை தூக்கும் தொழிலாளர்களை லஞ்சம் வாங்கித் தர வலியுறுத்தும் அதிகாரி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம், சத்திரம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட சுமார் ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகள் மற்றும் சுமைதொக்கும் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாராபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு, கடந்த 10 நாட்களாக அலங்கியம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களிடம், நெல் மணிகளை பிடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர மறுத்தால் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் இருவரும் அலங்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிகாரிகள் 40 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு பத்து ரூபாய் கேட்கும் ஆடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



அதிகாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல், குவியல் குவியலாக தேங்கி கிடப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...