உடுமலையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கும் கருவூல அலுவலர் - குவியும் பாராட்டு!

உடுமலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வரும் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் இலவசமாக போட்டி தேர்வு நூல்கள் வழங்கி மாணவர்களை சார்நிலை கருவூல அலுவலர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வருகிறார். தற்பொழுது ரூ.10,000 மதிப்புள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையிலான நூல்களை வழங்கினார்.

கடந்த முறை நடந்த தேர்வில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 9 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இருவர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...