தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயலில் உள்ளதா? - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு!

கோவையில் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காததை கண்டித்து, கண்களில் கருப்பு துணியை கட்டியவாறு ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் நூதன முறையில் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் செயலில் உள்ளதா எனக்கேட்டு முதியவர் நூதன முறையில் மனு அளித்துள்ளார்.

கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசிங்கம் (74). இவர், தான் குடியிருக்கும் 44 வது வார்டு பகுதியில் செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதாள சாக்கடை திட்டத்தின் மதிப்பீடு, எத்தனை நபர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ராஜசிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார்.



ஆனால் இதுகுறித்து எவ்வித முறையான பதிலும் மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து இதுவரை வராததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர் தன் தலையை பாதி மொட்டை அடித்து கொண்டும், கருப்பு துணியை கண்ணில் கட்டியும், அவரது கேள்வியை கழுத்தில் தொங்கவிட்டவாறும் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். முதியவரின் இந்த நூதன எதிர்ப்பு அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதுகுறித்து முதியவர் ராஜசிங்கம் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் செயல்பாட்டில் உள்ளதா? மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அனுப்புவதில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏன் இவ்வளவு தாமதம்?. தனது மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...