தாராபுரம் அருகே முதல்வர் பிறந்தநாளையொட்டி மாட்டு வண்டி பந்தயம் - 700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு!

தாராபுரம் அருகேயுள்ள பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்குபெற்றது.



திருப்பூர்: தாராபுரம் அருகே முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னாபுரம் பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தாராபுரம் ஒன்றிய திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கு பெற்றது.



இந்த மாட்டு வண்டி பந்தயம் 200 மீட்டர், 300 மீட்டர் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசு ஒரு பவுன் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...