தண்ணீர் குழாய்களில் மோட்டார் வைத்து உறிஞ்சினால் கடும் நடவடிக்கை - நகராட்சி அறிவிப்பு!

உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில், சட்டவிரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுபவர்கள் இரண்டு நாட்களுக்குள், அகற்றவில்லை என்றால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் அறிவிப்பு.


திருப்பூர்: உடுமலையில் சட்டவிரோதமாக குடிநீர் உறிஞ்சுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர மக்களின் தாகம் தீர்க்க திருமூர்த்தி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, குழாய்கள் மூலம் உடுமலைக்கு கொண்டு வரப்படுகிறது.

பின்னர் இந்த தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றப்பட்டு பகுதி வாரியாக 33 வார்டுகளுக்கும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஒருசில வீடுகளில் குடிநீர்க்குழாய் இணைப்பில் மின்மோட்டார்கள் பொருத்தி குடிநீரை உறிஞ்சுகின்றனர்.

இதனால் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் குடிநீர் போதுமான அளவில் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் திருமூர்த்தி அணையின் நீர்இருப்பு வேகமாக குறையும் நிலை உள்ளது.

மேலும் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்யப் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்துக்குப் புறம்பாக மின்மோட்டார் பொருத்தி இருந்தால், 2 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்த தவறினால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது குடிநீர் எடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .10 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...