ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள டாப்சிலிப் - பரமக்குளம் இடையேயான சாலையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக, அவ்வழியாக செல்லும் வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு மற்றும் மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளும் மற்றும் அரிய வகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.



தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடப்பதால் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன.



இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கும் கேரளா வனப்பகுதியான ஆணைப்பாடி எல்லைப் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் வந்துள்ளது இதை அவ்வழியாகச் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



மேலும் இந்த வீடியோவை கண்ட வனத்துறையினர் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலா பயணிகள் வழிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...