கோவை மதுக்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலியான சோகம்!

மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹர்சாத்(23) காரில் தனது நண்பர்களுடன் பாலக்காடு புறப்பட்டு சென்ற போது, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பழுதான சீட் பெல்டை கீழே சரிசெய்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் மகன் முகமது ஹர்சாத் (23). தொழிற்கல்வி படிப்பை முடிந்த அவர் பணிக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் முகமது ஹர்சாத் தனது நண்பர்களான பிரவீன், கோகுல்ராஜ், மற்றும் உறவினர் உசேன் அப்துல் ரகுமான், ஆகியோருடன் பாலக்காடு செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது பாலக்காடு நெடுஞ்சாலையில் சென்ற போது காரில் இருந்த சீட் பெல்ட் வேலை செய்யாததால், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்தி முகமது ஹர்சாத் சீட் பெல்ட்டை சரி செய்துள்ளார்.

இந்நிலையில், பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென ஹர்சாத் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை உடன் இருந்தவர்கள் மீட்டு குனியமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...