கோவைப்புதூர் அருகே பைக் மின்கம்பம் மீது மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவிஷ் (23), கோவை பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாவிஷ் உயிரிழந்தார்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் தக்கார் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன் பாவிஷ் (23). இவர் பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் பாவிஷ் கோவைப்புதூரில் தனியாக அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹரிகரன் என்ற மாணவருடன் பாவிஸ் பைக்கில் சென்று விட்டு, மீண்டும் அறைக்குத் திரும்ப பைக்கில் வந்துள்ளனர். அப்போது ஹரிகரன் பைக்கை ஓட்டியுள்ளார். புட்டு விக்கி சாலையிலிருந்து கோவைப்புதூர் நோக்கி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பாவிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாவிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...