கோவைப்புதூர் அருகே பைக் மின்கம்பம் மீது மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவிஷ் (23), கோவை பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பாவிஷ் உயிரிழந்தார்.


கோவை: கோவைப்புதூர் பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பம் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் தக்கார் பாபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் கூலித்தொழிலாளி. இவரது மகன் பாவிஷ் (23). இவர் பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் பாவிஷ் கோவைப்புதூரில் தனியாக அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஹரிகரன் என்ற மாணவருடன் பாவிஸ் பைக்கில் சென்று விட்டு, மீண்டும் அறைக்குத் திரும்ப பைக்கில் வந்துள்ளனர். அப்போது ஹரிகரன் பைக்கை ஓட்டியுள்ளார். புட்டு விக்கி சாலையிலிருந்து கோவைப்புதூர் நோக்கி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை ஓரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பாவிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பாவிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

வானதி சீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு: கோவை வடக்கில் அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம்

கோவை வடக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு தீவிர பிரச்சாரத்தால் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள்...

ரூ.760 கோடி மதிப்பீட்டில் 1700 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் Stalin ஆட்சியில் ரூ.760 கோடி மதிப்ப...

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...