கோவையில் 6 குட்டைகள் மாயம்..! - விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கிய கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 6 குட்டைகள் மாயமானதாகவும், அதை கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவையில் 6 குட்டைகள் மாயமானதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.



கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.



தொடர்ந்து மனுக்களும் கொடுத்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வரத்து கால்வாய்கள், நீர் வழிப்பாதைகளில் உள்ள முட்புதர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். கோடை மழை ஜூன் மாதம் முதல் தொடங்கும் முன்பு அனைத்து நீர் வழிப்பாதைகள் தூர்வாரப்பட வேண்டும். இதனை உள்ளாட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

உக்கடம் முதல் சின்ன வானொலி நிலையம் வரை 1985-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் ராமன் முயற்சியில் 7 இடங்களில் உருவாக்கப்பட்ட 90 ஏக்கர் குட்டைகளில் 6 குட்டைகள் காணாமல் போய் விட்டது.

எஞ்சி உள்ளது ஒரே ஒரு குட்டை தான். எனவே மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் மேற்கண்ட 6 இடங்களில் உள்ள 90 ஏக்கர் குட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக் குழு தலைவர் கூறுகையில் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாதிக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதனைப் பாதுகாக்க உலர் கலன்கள் இல்லை. இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். சாதிக்காய்கள் அதிக அளவு வீணாகப் போய்விடுகிறது. எனவே பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உலர் கலன்களை அமைத்து தர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அன்னூர் விவசாயிகள் சங்கம் ரங்கசாமி கூறுகையில், அன்னூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் செய்ய வேண்டும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...