பல்லடத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் - கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற உறுப்பினர்!

பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் ரம்மி மசோதாவை ரத்து செய்யாத தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர்: பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.



பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 வார்டு கவுன்சிலர்களில், ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



அரசு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் கூட்ட அரங்கமே வெறிச்சோடி காணப்பட்டது.



இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக நிராகரித்தற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பல்லடம் ஐந்தாவது ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.



பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிரை பலி வாங்கும் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமனதாக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றினாலும், தமிழக ஆளுநர் அதை நிராகரித்து வருவதை கண்டிக்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...