மறைந்த பலகுரல் கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் அஞ்சலி!

மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு, ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர், கோவையில் நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.



கோவை: மறைந்த மிமிக்கிரி கலைஞர் கோவை குணாவின் உடலுக்கு நகைச்சுவை நடிகர்கள் மற்றும் சக மிமிக்கிரி கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பலகுரல் கலைஞரான கோவை குணா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அதனைத் தொடர்ந்து பல்வேறு பலகுரல் கலைஞர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் நகைச்சுவை நடிகர்களான ஈரோடு மகேஷ், திருப்பாச்சி பெஞ்சமின், பாடகர் மூக்குத்தி முருகன் ஆகியோர் நேரில் வந்து கோவை குணாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும் அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள், பலகுரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடலானது கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...