கோவை செம்மொழிப் பூங்காவில் அமையவுள்ள அம்சங்கள் என்னென்ன?

கோவையில் அமையவுள்ள செம்மொழி பூங்காவில், வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் மற்றும் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட்டில் கோவையில் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நவீன செம்மொழி பூங்காவில் 16 வகையான பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலக தமிழ் செம்மொழி மாநாட்டினையொட்டி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது.



அதன்படி 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைய உள்ளதாகவும் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அமையப்படும் செம்மொழி பூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கும் பயன்பெறும் வகையில் 172.21 கோடி மதிப்பில் உலக தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த செம்மொழி பூங்காவில் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மரவனம் ஆகிய வனங்கள் இடம்பெற உள்ளன. பொதுமக்கள் பூங்காக்களின் வகை மற்றும் அதன் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்கள் கலை நுட்பத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பூங்கா வளாகத்தில் விசேஷ மண்டபங்கள், உள் அரங்கம், வெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறையில், திறந்தவெளி அரங்கம் மற்றும் உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளுடன் அமைப்பதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது. வெப்ப மண்டல நாடான நமது இந்தியாவில் அது போன்ற பூங்கா இதுவரை அமைக்கப்படாத காரணத்தினாலும் இத்தகைய சிறப்புமிக்க செம்மொழிப் பூங்காவை அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...