கோவை அசோகபுரம் பள்ளியில் சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அருகேயுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் துறை மற்றும் சிட்டுக்குருவிகள் அறக்கட்டளையினர் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.



கோவை: அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ காலனியிலுள்ள அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 200க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டத்தினர், சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பள்ளி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் தலைவர் கேசவசாமி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். சிட்டுக்குருவிகள் அறக்கட்டளை நிறுவனர் தனசேகர் முன்னிலை வகித்து சிட்டுக்குருவிகள் எப்படி வளர்க்க வேண்டும், பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.



இதில் பொறியியல் கல்லூரியிலிருந்து வந்த சிட்டுக்குருவிகள் விழிப்புணர்வு பேருந்து வாகனத்தில் ஏற்கனவே பள்ளி மாணவ, மாணவிகள் வரைந்த சிட்டுக்குருவிகள் பற்றியான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் பறவைகளின் சத்தம் அடங்கிய ஆடியோக்கள் லேப்டாப் மூலம் போடப்பட்டு காண்பிக்கப்பட்டது.



கல்லூரி மாணவ, மாணவிகள் சிட்டுக்குருவி மற்றும் கிளி மாதிரியான வேடமிட்டு பறவைகள் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதில் பள்ளி மாணவிகள் ஒவ்வொருவராக பேருந்தில் ஏறி அங்கிருந்த ஓவியங்களை பார்த்தும், அதுகுறித்தான தகவல்களை கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...