தாராபுரம் அருகே கார் மோதி விபத்து - பைக்கில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் பலி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரியநல்லூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சின்னசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சூரியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாச்சிமுத்துகவுண்டர் மகன் சின்னசாமி (வயது 70). இவர் உப்பாறு அணையில் இருந்து சூரியநல்லூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, புறவழிச் சாலையில் திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற கார் சின்னசாமியின் இருசக்கர டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் முதியவர் சின்னசாமியின் தலை சொகுசு காரின் பம்பரில் மாட்டி கொண்டது.



அதே நேரத்தில் கால்கள் முன் சக்கரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கார் வேகமாக பிரேக் அடித்ததில் தலை பம்பர் கம்பியில் பட்டு தலை அறுந்து துண்டானது. கால் முறிவு ஏற்பட்டு 100 மீட்டர் தொலைவிற்கு சின்னசாமியின் உடலை தர தரவென இழுத்துக் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் நாச்சிமுத்து என்பவரை பிடித்து குண்டடம் காவல்துறையில், காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரின் தலை சாலை விபத்தில் துண்டான சம்பவம் சூரியநல்லூர் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரியநல்லூர் பகுதியில் சிக்னல்கள் இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் திருப்பூரில் இருந்து வரும் வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதாகவும் அதை கட்டுப்படுத்த மேலும் சிக்னல்கள் அமைத்து வாகனத்தின் வேகத்தை குறைக்க வேகத்தடைகள் அமைத்து அப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...