வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வால்பாறையில் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு உதவிகளும், முதியோர் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று காருண்யா சோசியல் சென்டர் நிறுவனம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது இதில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளிலும் காருண்யா சோசியல் சர்வீஸ் சென்டர் மூலம் சுய உதவி குழுவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர். சுய உதவி குழுக்களை சிறப்பாக நடத்துபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தூய இருதய பள்ளி தாளாளர் சௌமியா பேசியதாவது, பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். தலைசிறந்து விளங்க வேண்டும். பெண்களுக்கு பிரச்சனைகளை கையாளுவது எப்படி என்றும் பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வால்பாறை மையப்பகுதியான காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் மற்றும் புதிய பேருந்து நிலைய வரை பேரணி நடைபெற்றது.



இந்த விழாவில் வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், பள்ளி தாளாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...