வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சுய உதவி குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வால்பாறையில் காருண்யா சோசியல் சென்டர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வால்பாறையில் சுய உதவி குழுவில் உள்ள பெண்களுக்கு தையல் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி போன்றவற்றை வழங்கி வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு உதவிகளும், முதியோர் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த தொண்டு நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று காருண்யா சோசியல் சென்டர் நிறுவனம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது இதில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வால்பாறை காவல்துறை ஆய்வாளர் கற்பகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், வால்பாறையில் உள்ள 62 எஸ்டேட்டுகளிலும் காருண்யா சோசியல் சர்வீஸ் சென்டர் மூலம் சுய உதவி குழுவில் உள்ள பெண்களும் கலந்து கொண்டனர். சுய உதவி குழுக்களை சிறப்பாக நடத்துபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தூய இருதய பள்ளி தாளாளர் சௌமியா பேசியதாவது, பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். தலைசிறந்து விளங்க வேண்டும். பெண்களுக்கு பிரச்சனைகளை கையாளுவது எப்படி என்றும் பெண்கள் இந்த நாட்டின் கண்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வால்பாறை மையப்பகுதியான காந்தி சிலை போஸ்ட் ஆபீஸ் மற்றும் புதிய பேருந்து நிலைய வரை பேரணி நடைபெற்றது.



இந்த விழாவில் வால்பாறை திமுக நகரச் செயலாளர் சுதாகர், பள்ளி தாளாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...