தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு - போக்சோ வழக்கு சோதனை குறித்து விசாரணை!

தாராபுரம் அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவர்களிடம் போக்சோ வழக்கில் சிறார்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட மகிளா நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனையில் திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் தாராபுரம் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் இன்று திடீரென அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.



அப்போது தலைமை மருத்துவர் சிவபாலன் மற்றும் குழுவினருடன் மருத்துவமனையில் பெண்கள் பொது வார்டு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரசவ வார்டு, ஆப்ரேசன் தியேட்டர் உள்ளிட்ட பகுதி அறைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



பின்னர் நீதிபதிகள் மருத்துவர்களிடம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் போக்சோ வழக்குகள் குறித்தும் போலீசார் குற்றவாளிகளை பரிசோதனைக்கு வரும் போது குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறார் குழந்தைகளுக்கு செய்யப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினரிடம் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வின் போது, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலன், மருத்துவர்கள் சத்தியராஜ் மற்றும் பெரியசாமி, குற்றவியல் காவல் ஆய்வாளர் அன்புச் செல்வி, உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பலரும் உடனிருந்தனர்.

அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல் தலைமையில் அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...