ரியல், ரீல் ரவுகளை தட்டித் தூக்கிய தனிப்படை - அடிதடி சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலம்

கோவையில் சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்த ரியல் மற்றும் ரீல் ரவுடி கும்பலை சேர்ந்த 13 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


கோவை: கோயமுத்தூரில் சமீபத்தில் கோகுல், சத்திய பாண்டி இருவர் சக ரவுடி போட்டி கும்பலால் வெட்டி சாய்த்து கொல்லப்பட்டிருக்கின்றனர் . இந்த நிலையில் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ரவுடிகளை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் துணை ஆணையாளர் சந்தீஸ், உதவி ஆணையாளர் ரவி, இன்ஸ்பெக்டர் தெய்வமணி அடங்கிய தனிப்படை போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதி ரவுடிகளை கைது செய்ய திட்டமிட்டனர். அதனடிப்படையில் சமீபத்தில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி தொடர்பாக 30 நபர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

அவர்கள் சண்டையில் ஆயுதங்களை பயன்படுத்தியது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் குற்ற பின்னணியில் உள்ளவர்களின் பட்டியலை தயார் செய்த தனிப்படை போலீசார், ஒரே நாளில் ஜார்ஜ் ஸ்டீபன், ஜாபர் (எ) ராகுல்ராம், செல்வகுமார், உதயகுமார், கேசவன், சுப்பிரமணியன், வாசன், சூர்யா, சக்திவேல், சரவணன், சபரி ராஜ், பிரகாஷ், பிரதீப் குமார் உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்தனர்.

சட்டம் ஒழுங்கை பாதுக்காக்கும் பொருட்டு ரவுடிகளுக்கு சமூக வலைதள ரீல் ரவுடிகள், அடிதடி, கட்டபஞ்சாயத்து ரவுடிகள் என தாதாக்களின் கும்பலின் குற்றச்செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படை போலீசார் நடத்தும் இந்த தீவிர வேட்டை, ரவுகளை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...