ரயில்பாதையில் கண்காணிப்பு கேமிராக்கள் - யானை இறப்பைத் தடுக்க வனத்துறை தீவிரம்!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் ரயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற்கான ஆய்வுப் பணிகளை மதுக்கரை வனத்துறையினர் மேற்கொண்டனர்.



கோவை: கோவையில் இருந்து மதுக்கரை வழியாக பாலக்காடு மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் மதுக்கரைக்கு உட்பட்ட சோளக்கரை வணப்பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது.

இந்த வனப்பகுதிக்குள் இருக்கும் ரயில் பாதையை கடக்கும் போது சில சமயங்களில் ரயிலில் அடிபட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்க நேரிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் இருந்த இரண்டு யானைகள் ரயில் பாதையை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இதனால் வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து ரயில் பாதைக்கு வராமல் யானைகள் மற்றும் வன விலங்குகள் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்து பாதை ஏற்படுத்தி தரவும் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தவும் ரயில்வே துறை முடிவு செய்தது.



அதற்காக யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதியான சோளக்கரை பகுதியில் ரயில் பாலம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பாலம் கட்டும் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



இந்த நிலையிலே சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காக வந்துள்ள ரயில்வே தொழில்நுட்ப துறை அதிகாரிகள், மதுக்கரை வனப்பகுதி ரேஞ்சர் சந்தியா தலைமையில் அந்த பகுதிக்கு சென்று எங்கெங்கு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்று பார்வையிட்டனர்.

விரைவில் சோளக்கரை வனப்பகுதியில் உள்ள ரயில் பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்க உள்ளது. இந்த பணி நிறைவடையும் நிலையில் யானை உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு விபத்தை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...