கோவை சின்னாம்பதி அருகே பிடிபட்ட 13 அடி ராஜநாகம் - பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விடப்பட்டது!

கோவை சின்னாம்பதி கிராமம் கொடாம்மேடு பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்றபோது 13 அடி கொண்ட ராஜநாகத்தை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாம்புபிடி வீரர்கள், பாம்பை பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சாலையோரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை பாம்புபிடி வீரர்கள் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.

கோடை காலம் நெருங்கி வருவதால், அடர் வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் நீரோடைகள் மற்றும் வன எல்லைகளுக்கு நீர் மற்றும் உணவு தேடி வரத் துவங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு அருகே அமைந்துள்ள கொடாம்மேடு, சின்னாம்பதி மலை கிராமத்திற்கு செல்லும் வழி சாலையில் சுமார் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் செல்வதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக உடனடியாக மதுக்கரை வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.



விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் விஜேஷ் மற்றும் ராஜேஷ் சாலை ஓரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை போராடி பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட ராஜநாகத்தை வாளையாறு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். மிகவும் அடர்வனப்பகுதியில் வாழ்விடத்தை கொண்டுள்ள அதிக விஷத் தன்மையுடைய ராஜநாகம் விவசாய தோட்டத்தின் அருகே கண்டறியப்பட்டது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே ராஜநாகம் வெளியே வந்து பிடிக்கப்பட்டு அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்படுவதாக பாம்பு பிடி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...