கோவையில் லஞ்ச ஒழிப்பு சோதனை - கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல்

கோவையில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2 குழுவினர், நேற்று மாலை 4 மணியளவில் துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.



இதில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வாளர் லதா தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அப்போதுஒவ்வாரு அறைகள், மேஜைகள், குப்பை தொட்டி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். அதில், வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.



இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதேபோல், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழுவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.13,500-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.



இதுதொடர்பாக அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...