தாராபுரத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு - மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால், குழந்தைகள், முதியவர் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை, மாலை, மதியம், இரவு என பல்வேறு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின்சாரம் வந்து சென்றால் மின்விசிறி உட்பட வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதாகிவிடுகின்றன.

தற்போது 12ஆம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் வகையில் தொடரும் இந்த மின்வெட்டை சரிசெய்து, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என தாராபுரம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...