பல்லடத்தில் மதுபோதையில் மயங்கிக் கிடந்த வி.ஏ.ஓ - வைரலாகும் புகைப்படங்களால் பரபரப்பு!

பணிநேரத்தில் மதுபோதையில் இருந்த திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் ஜெய்சிங் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன். நேற்று மதியம் மாதப்பூர் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் என்பவர் சாலை பிரச்சனை குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனிடம் பேச அவரை தொடர்பு கொண்டார்.



அப்போது பாலசுப்பிரமணியத்திடம் மதுபோதையில் இருந்த வி.ஏ.ஓ ஜெகநாதன் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை பாலசுப்பிரமணியம் பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது, ஒரு வீட்டின் அருகே ஜெகநாதன் மதுபோதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பணி நேரத்தில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த ஜெகநாதன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டபோது, பணி நேரத்தில் மது போதையில் இருந்த ஜெகநாதன் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பணி நேரத்தில் மது போதையில் மயங்கி கிடந்த கிராம நிர்வாக அலுவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...