மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அசோக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த பிரசாந்த் உத்தமன் என்ற நபரை கோவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார்(வயது30). இவர் கார் மெக்கானிக்காக ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், பிரசாந்த் உத்தமன் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரசாந்த் உத்தமன் ஸ்கவுட் பிரிவில் மாநில அளவில் உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறை ஒன்றில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பணம் செலவாகும் என்று தெரிவித்த பிரசாந்த் உத்தமன், அசோக் குமாரிடம் இருந்து 2020 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை கிடைத்தது போன்ற போலி பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் ஏற்பாடு செய்து, அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணி ஆணை போலி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...