மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம் மோசடி - போலீசார் விசாரணை

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அசோக்குமாரிடம் 9 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த பிரசாந்த் உத்தமன் என்ற நபரை கோவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சார்ந்தவர் அசோக் குமார்(வயது30). இவர் கார் மெக்கானிக்காக ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அறிமுகமான நபர் ஒருவர், பிரசாந்த் உத்தமன் என்ற நபரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிரசாந்த் உத்தமன் ஸ்கவுட் பிரிவில் மாநில அளவில் உயர் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்து அறிமுகப்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் உள்ள துறை ஒன்றில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை காலியாக இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இதற்காக பணம் செலவாகும் என்று தெரிவித்த பிரசாந்த் உத்தமன், அசோக் குமாரிடம் இருந்து 2020 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஸ்கவுட் மாஸ்டர் வேலை கிடைத்தது போன்ற போலி பணி ஆணையை பிரசாந்த் உத்தமன் ஏற்பாடு செய்து, அசோக்குமாரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த பணி ஆணை போலி என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார், சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரசாந்த் உத்தமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...