இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. இதுவரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.எனக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: இரண்டு ஆண்டுகளில் காற்றாலைகள் மூலம் 20 ஆயிரம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்துவரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் சூரியஒளி ஆற்றல் உற்பத்தியில் 4,500 மெகாவாட் மற்றும் காற்றாலை துறையில் 10 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் உற்பத்தி சிறப்பாக உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியக் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது, காற்றாலை சீசன் குறிப்பிட்ட ஏழு மாதங்கள் மட்டுமே இருந்தாலும் நிதியாண்டு அடிப்படையில் தான் மொத்த மின்உற்பத்தி கணக்கிடப்படுவது வழக்கம். கடந்த 2021-22 நிதியாண்டில் மொத்தம் 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவிலான மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டன.

2022-23ம் நிதியாண்டிலும் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தற்போது வரை 10 ஆயிரம் மில்லியன் யூனிட்டை கடந்துவிட்டது. மார்ச் இறுதிக்குள் கடந்த நிதியாண்டு போல 11 ஆயிரம் மில்லியன் யூனிட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மத்திய, மாநில அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...