கோவையில் தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதி விபத்து - வேன் ஓட்டுநர் பலியான சோகம்!

கோவை மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஐடி நிறுவனத்திற்கு வாடகை வேன் ஓட்டி வந்த ராமலிங்கம்(30) என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


கோவை: மாதம்பட்டி அருகே தனியார் கல்லூரி பேருந்து மீது இகோ வேன் மோதி விபத்து, வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை பூலுவப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (30). இவர் ஐடி நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வேன் ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சிறுவாணி சாலையில் ராமலிங்கம் காரில் வேலைக்குச் சென்றுள்ளார்.



அப்போது மாதம்பட்டி கருப்பசாமி தோட்டம் அருகே வந்த போது, ராமலிங்கம் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், ராமலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...