கோவையில் கல்லூரி மாணவியை கடத்தி சென்ற ஓட்டுநர் போக்சோவில் கைது!

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியை ராமேஸ்வரத்திற்கு கடத்திச் சென்ற சாத்தூரை சேர்ந்த ஓட்டுனர் ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற ஓட்டுனரை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த 17வயது மாணவி கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் கல்லூரிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் மாணவியை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் மாணவியின் செல்போன் மூலம் அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர் சாத்தூரை சேர்ந்த ஓட்டுநர் ஞான பிரகாசம் (27) என்பவரோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஞானப்பிரகாசம், செல்போன் சிக்னலை சோதனை மேற்கொண்டதில் ராமேஸ்வரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.



இதனை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் ராமேஸ்வரம் சென்று ஞானபிரகாசத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...