திருப்பூர் மாவட்டத்தில் 93 மையங்களில் 12 பொதுத்தேர்வு - மாநகராட்சிப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 160 மாணவ, மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி ஜெயா பாய் பள்ளியில் பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2023-க்கான பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

இந்தத் தேர்வானது வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 93 தேர்வு மையங்களில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும்; தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் முதல் நாளான இன்று திருப்பூர் ஜெயா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...