கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி - கணவரை தொடர்ந்து மனைவி கைது!

கோவை கணபதி அருகே கடந்த 2019ஆம் ஆண்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த கணவர் செந்தில்குமாரை தொடர்ந்து மனைவி லலிதாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கணபதி அருகே நிதிநிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.



கணபதி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவரது மனைவி லலிதா (28). இவர்கள் இருவரும் மேலும் 5 பேருடன் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு அந்த பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 17.5 சதவீத வட்டியுடன் 100 நாட்கள் கழித்து ரூ.2 லட்சம் திரும்ப தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மற்றொரு திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 20 சதவீத வட்டியுடன் 12 மாதங்கள் கழித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்த கவர்ச்சிகர அறிவிப்புகளை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2020-ம் ஆண்டு புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஆய்வாளர் செல்வராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதிக வட்டி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரின் மனைவி லலிதாவை ஆய்வாளர் செல்வராணி தலைமையிலான போலீசார் இன்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...