அக்னிபாத் திட்டத்தால் ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றம் - திருப்பூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு அக்னிபாத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் மற்றும் துணை இயக்குனர் மதன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளம் வயதினர் ராணுவத்தில் தங்களை இணைத்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக உடல் தகுதி தேர்ச்சி பெற்ற பின் எழுத்து தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு உடல் தகுதி தேர்வு செய்யப்படுவது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும் மாணவர்கள் ராணுவ அதிகாரிகளுடன், கலந்துரையாடி தங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...