அக்னிபாத் திட்டத்தால் ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றம் - திருப்பூரில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு அக்னிபாத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் மற்றும் துணை இயக்குனர் மதன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளம் வயதினர் ராணுவத்தில் தங்களை இணைத்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதற்கு முன்பாக உடல் தகுதி தேர்ச்சி பெற்ற பின் எழுத்து தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு உடல் தகுதி தேர்வு செய்யப்படுவது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும் மாணவர்கள் ராணுவ அதிகாரிகளுடன், கலந்துரையாடி தங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...