கோவை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - கள்ளக்குறிச்சி நபர் கைது

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட ரூ-3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏர்அரேபியா விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நுண்ணறிவு மற்றும் வருவாய் புலன் ஆய்வு துறை அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளை சோதனையிட்டனர்.

அப்போது 11 பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தங்கத்தை கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

அந்த வகையில் ஷூ, ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 3.8 கோடி ரூபாய் ஆகும்.

தங்கம் கடத்தப்பட்ட விவகாத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் தங்க சங்கிலிகளாகவே கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...