கோவை விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் - கள்ளக்குறிச்சி நபர் கைது

சார்ஜாவிலிருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட ரூ-3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: சார்ஜாவில் இருந்து கோயம்புத்தூருக்கு ஏர்அரேபியா விமானம் வந்தது. அதில் சிலர் தங்கம் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நுண்ணறிவு மற்றும் வருவாய் புலன் ஆய்வு துறை அதிகாரிகள் விமானத்தில் பயணித்து வந்த பயணிகளை சோதனையிட்டனர்.

அப்போது 11 பயணிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான தங்கத்தை கொண்டுவந்திருப்பது தெரியவந்தது.

அந்த வகையில் ஷூ, ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்டவற்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 3.8 கோடி ரூபாய் ஆகும்.

தங்கம் கடத்தப்பட்ட விவகாத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் பெரும்பாலும் தங்க சங்கிலிகளாகவே கடத்தி வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...